Saturday 4th of May 2024 02:10:49 AM GMT

LANGUAGE - TAMIL
பிரான்ஸில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால் பொதுப் போக்குவரத்துக்கள் முடங்கின!

பிரான்ஸில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால் பொதுப் போக்குவரத்துக்கள் முடங்கின!


டீசலுக்கு வழங்கப்படும் மானியத்தை அரசாங்கம் குறைத்துள்ளதை எதிர்த்து பிரான்ஸில் 10 பிராந்தியங்களில் வீதிகளை மறித்து லொறிச் சாரதிகள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதியச் சீர்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தால் பிரான்ஸ் ரயில் போக்குவரத்து சேவைகள் ஏற்கனவே ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்நிலையில் டீசலுக்கான வரிச் சலுகை குறைக்கப்படுவதைக் கண்டித்து வீதிகளை மறித்து லொறி ஓட்டுநர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பொதுப் போக்குவரத்து சேவைகள் பிரான்ஸில் முடங்கியுள்ளன.

டீசலுக்கு வழக்கப்படும் அரசின் மானியக் குறைப்பை எதிர்த்து நேற்று சனிக்கிழமை பிரான்ஸைச் சுற்றியுள்ள சுமார் 10 பிராந்தியங்களில் வீதிகளை மறித்து லொறிகளை நிறுத்தி போராட்டம் இடம்பெற்றது.

பாரிஸில் குடியிருப்புக்கள் நிறைந்த இடது கரை டென்ஃபெர்ட் ரோச்செரூ பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்களும் இடம்பெற்றன.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE